News October 2, 2024

மத்திய பிரதேச முதல்வரிடம் புகார் அளித்த பெற்றோர்

image

துவாக்குடி அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேசம் மாணவி ஓஜஸ்விகுப்தா கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர் இன்று வரை திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் திருவெறும்பூர் டிஎஸ்பியிடம் புகார் கொடுத்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மத்திய பிரதேச முதல்வரை சந்தித்து தங்களது மகளை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.

Similar News

News August 18, 2025

திருச்சி மக்களே சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க. SHARE பண்ணுங்க.

News August 18, 2025

திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் ஆக.22ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுலவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுப்பொருட்கள் மற்றும் வேளாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

திருச்சி – பாலக்காடு ரயில் கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு

image

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் இருகூர், சிங்காநல்லூர் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று (ஆக.18) முதல் திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் மேற்குறிப்பிட்ட நிறுத்தங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!