News October 25, 2025

மத்திய குழுவின் ஆய்வு ஒத்துழைப்பு – ஆட்சியர்

image

தஞ்சாவூரில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய குழுவின் ஆய்வு செய்ய இருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேரம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி ஆலையை ஆய்வு செய்ய நாமக்கல்லுக்கு ஒரு குழுவும் கோவைக்கு ஒரு குழுவும் திருச்சியில் இருந்து புறப்பட்டுள்ளனர் நாளை முதல் டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளனர்.

Similar News

News February 7, 2026

தஞ்சை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News February 7, 2026

தஞ்சாவூரில் இன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

image

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் இன்று (பிப்.7) நடைபெறவுள்ளன. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள், ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள், தஞ்சாவூர், பாபநாசம், திருப்புறம்பியம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.07) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!