News December 2, 2024

மத்திய அரசை வலியுறுத்திய குமரி எம்.பி

image

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்தின் அலுவலகம் இன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் 1000 கோடி மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்; மத்திய அரசு நிபுணர் குழுவை தமிழகத்திற்கு அனுப்பி சேதங்களை பார்வையிட வேண்டும்” என எம்.பி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

Similar News

News August 5, 2025

பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு விருது

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாநில திட்டக்குழு ஆணையத்தால் கடந்த 1ம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் பூதப்பாண்டி அரசு மருத்துவனையில் வளமிகு வட்டார வளர்ச்சித்திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு சிறந்த நடைமுறைக்கான விருது (Best Practices Award) வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

News August 5, 2025

கன்னியாகுமரி மக்களே… மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தெரியுமா?

image

குமரி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <>இதில் பயன்பெறலாம்<<>>. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News August 5, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 5) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.43 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.12 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 76 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.85 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 360 கன அடி, பெருஞ்சாணிக்கு 143 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

error: Content is protected !!