News November 12, 2024
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களும் எதிர்ப்புகளும் உள்ள நிலையில், திருச்சி பாலக்கரை பகுதியில் வக்பு திருத்தச் சட்டம் என்கிற பெயரில் இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News August 17, 2025
திருச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வருகிற 31ம் தேதி ஜமால் முகமது கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற, 18 – 35 வயதுக்குட்பட்டவர்கள் கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் பங்கேற்கலாம்.
News August 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் முசிறி, தண்டலைப்புதூர், தும்பலம், மணமேடு, எடமலைப்பட்டி புதூர், மன்னார்புரம், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜாமலை, மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE !
News August 17, 2025
திருச்சி: மருங்காபுரியில் லாட்டரி விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு போலிசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மருங்காபுரி நடுத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் (46) என்பவர் லாட்டரி விற்ற போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து ரொக்கம் ரூ.14000 மற்றும் லாட்டரி எண்கள் குறிக்கப்பட்ட ஒரு பேப்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.