News August 1, 2024

மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்

image

குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டுமென காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது குறித்து 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இந்த 3 சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 28, 2025

காஞ்சியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539569>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

காஞ்சி: பெண் பிள்ளை உள்ளதா? உடனே விண்ணப்பியுங்கள் (2/2)

image

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)

News August 28, 2025

காஞ்சியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்

image

▶காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில்
▶காஞ்சிபுரம் சுப்ரமணிய சுவாமி கோயில்
▶காஞ்சிபுரம் மேல்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில்
▶குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில்
▶செய்யூர் கந்தசாமி கோயில்
▶நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்
▶புருசை கிராமம் பாலமுருகன் கோயில்
▶வல்லக்கோட்டை முருகன் கோவில்
மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!