News March 26, 2025

மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கேட்கப்படும் – முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில் நேற்று பேசிய முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார திட்ட பெயரில் ஆசிய வங்கியிடம் இரு கட்டமாக ரூ.4,750 கோடி கடனாக பெற அரசு சமர்ப்பித்த திட்ட முன்மொழிவு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தற்போது அந்த தொகையை சிறப்பு மானியமாக விடுவிக்க மத்திய அரசிடம் கோரப்படும்.

Similar News

News March 29, 2025

வதந்தியை நம்பி திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்

image

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நடைபெறாது சனிக்கிழமை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் மற்றபடி சனிப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறாது என திருநள்ளாறு கோயில் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று நடப்பதாக வந்த வதந்தியை நம்பி திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் கூடி ஏமாற்றம் அடைந்தனர். இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க SHARE செய்யவும்..

News March 29, 2025

யுகாதி வாழ்த்து தெரிவித்த புதுவை முதலமைச்சர்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களால் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படும் இந்த யுகாதி பண்டிகை, புதிய தொடக்கத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்குவதாக அமையட்டும், எனக் கூறி மேலும் புதுச்சேரி மக்களுக்கு தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு தலைமை பொறியாளர் நியமனம்

image

புதுச்சேரி பொதுப்பணித்துறை [சிடிசி] சர்க்கிள் – 1 கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் வீரசெல்வத்திற்கு புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருந்த தீனதயாளன் சமீபத்தில் லஞ்ச புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வீரசெல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!