News August 16, 2024

மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்பதில் சிக்கல்

image

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழ்நாடு குறித்து சர்ச்சைக் கருத்துக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்பதில் சிக்கல் உள்ளது. ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மத்திய இணை அமைச்சர் சோபா மன்னிப்பு கேட்டுள்ளார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தரப்பு எடுத்து உரைத்துள்ளது. இதனை அடுத்து விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News September 18, 2025

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

கிண்டி ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (செ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,12th, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு <>இந்த லிங்க்<<>> (அ) 9499966026 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News September 18, 2025

சென்னை: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

image

சென்னை மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்க

News September 18, 2025

சென்னை ஆணையரகத்தில் நடிகர் பாலா மீது புகார்

image

நடிகர் பாலா மீதும், காந்தி கண்ணாடி படக்குழு மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காந்தி கண்ணாடி திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் ஷெரீப், நடிகர் கேபிஒய் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!