News July 7, 2025

மது போதையில் பாலியல் பலாத்காரம்

image

சென்னையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழி, 2 ஆண் நண்பர்களுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் மது அருந்தியபோது, மது போதையால் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணிடம் ஆண் நண்பர்களில் ஒருவர் இவ்வாறு செய்துள்ளார். கண் விழித்து பார்த்தபோது அப்பெண் ஆடை இல்லாமலும், பிறப்பு உறுப்பில் காயத்துடனும் இருந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தோழி, ஆண் நண்பரை கைது செய்தனர்.

Similar News

News July 7, 2025

ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் இந்த <>லிங்கில் <<>>உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் கொடுக்க வேண்டும். உடனே காப்பீடு அட்டை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

image

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, சென்னை மாவட்ட அதிகாரிகள் (7373008060, 7373004541, 7373005408) அல்லது உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16974106>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

சென்னை பெருநகரில் ஜூலை 21 வரை வாரண்டின்றி கைது

image

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், காவல்துறை அதிகாரிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என சந்தேகப்பட்டால், வாரண்ட் இல்லாமல் கைது செய்ய பிரிவு 41-ன் கீழ் அதிகாரம் வழங்கியுள்ளார். இந்த உத்தரவு ஜூலை 6 இரவு 12 மணி முதல் ஜூலை 21 இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!