News February 9, 2026
மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
Similar News
News February 9, 2026
நெல்லை: போக்சோவில் சிக்கிய போலீஸ்; 20 ஆண்டுகள் சிறை!

நெல்லை, சிதம்பராபுரத்தை சேர்ந்த போலீசார் ஆனந்த கலைச்செல்வன்(32), உறவினரின் மகளான +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2024 நவ; கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு நடந்தது. திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.12,000 அபராதம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
News February 9, 2026
நெல்லை: ரயில் மோதி ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகே நேற்று முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த செங்கோட்டை பயணிகள் ரயில் மோதி முதியவர் பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 9, 2026
மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.


