News April 20, 2024

மது அருந்து கூடாரமாக மாறிய போக்குவரத்து அலுவலகம்

image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கம் /பயண அட்டை வழங்கும் இடம் உள்ள அலுவலகம் இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது, காலையில் பேருந்து நிலையம் வரும் பயணிகள் முகம் சுழிப்போடு செல்கின்றனர் தொடரும் இந்த அவலத்தை தடுத்திட நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?நகராட்சி நிர்வாகம்? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Similar News

News July 5, 2025

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

image

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <>இந்த லிங்க்<<>> மூலம் அப்ளை செய்து இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். ஷேர் பண்ணுங்க. <<16950015>>தொடர்ச்சி<<>>

News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம்

image

கட்டுமான தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் ESIC or EPFO திட்டங்களில் கீழ் வராத தொழிலாளர்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*

News July 5, 2025

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

image

திண்டிவனம் சந்தைமேடு புறவழிச்சாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான எட்டியம்மன் கோவில் முன் பகுதியில் பூட்டு போட்டு வைத்திருந்த உண்டியலை கடப்பாறையால் உடைத்து அதில் இருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் நேற்று இரவில் திருடி சென்றனர். சில நாட்களுக்கு முன் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்க தாலி திருடு போன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!