News October 3, 2025

மதுவிலக்கு வேட்டை: 26 பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மதுவிலக்கு வேட்டையில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 584 மது பாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News October 2, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.2) இரவு 10.00 மணி முதல் (அக்.3) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 2, 2025

விழுப்புரம் : அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, <>அல்லது இணையதளம்<<>> மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News October 2, 2025

விழுப்புரம்: உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு

image

தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியத்துடன் முதல்வரின் உழவர் நல வாரிய சேவை மையம் அமைக்க விண்ணபிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தோட்டக்கலை, வேளாண்மை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்குதல் போன்றவை இதன் மூலம் வழங்கப்படும். தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!