News December 21, 2025
மதுரை: 21 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சேர்ந்த முதியவர்

கடந்த (03.12.24) மதுரை LIC மேம்பாலம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 65 வயது கோபால் என்பவரை “காவல் கரங்கள்” அமைப்பினர் மீட்டு சிகிச்சைக்காக திருநகரில் உள்ள தாய்மடி இல்லத்தில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் முகவரி கண்டறியப்பட்டு, சாத்தூரில் வசிக்கும் அவரது மனைவியிடம், காவல் துணை ஆணையர் அனிதா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார். 21 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டார்
Similar News
News December 22, 2025
மதுரை: பிரேக் அடித்த லாரி; டூவிலரில் வந்த இளைஞர் பலி

வாடிப்பட்டி நீரேத்தானை சேர்ந்த தேசிகன்(19). கன்னியாகுமரியை சேர்ந்த சானியா(19) என்பவரை டூவீலரில் அழைத்து கொண்டு மதுரை – திண்டுக்கல் சாலையில், டூவீலரில் நேற்று சென்றார். அப்போது மேம்பாலத்தில் முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட, பின்னால் சென்று டூவீலர் அதில் மோதியது. இதில் தேசிகன் சம்பவ இடத்திலே பலியாக, சானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற கோரிய விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல கடந்த 20 நாட்களாக போலீசார் அனுமதி மறுத்த நிலையில் இன்று (டிச.22) மாவட்ட நிர்வாகம் தரிசனத்திற்கு செல்ல அனுமதித்துள்ளது. காலை 6 முதல் மாலை 6 மணி வரை கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும், வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
மதுரை: 12th முடித்தால் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

மதுரை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் <


