News March 21, 2024
மதுரை: 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி பூவாத்தாள்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது 15 வயது மகள் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு உடலில் காயங்கள் எதும் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 16, 2025
மதுரை : சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் காலமானார்

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் காலமானார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் மாரியம்மாள் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4.00 மணிக்கு திருப்பரங்குன்றம் மேல ரத வீதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
மதுரை: உள்ளூரிலேயே அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
News April 16, 2025
மதுரையில் ஏப்.26 முதல் கிராமிய விளையாட்டு போட்டி

மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு ஏப். 26 முதல் மே 3 வரை மதுரை கிராமிய ஒலிம்பிக் எனும் தலைப்பில் பல்வகை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஏப். 26 ல் பல்லாங்குழி, 28 ல் தாயம், 29 ல் தட்டாங்கல், 30 ல் கிட்டிப்புல், மே 1 ல் கோலிக்குண்டு, 2 ல் நொண்டி, 3ல் பம்பரம் விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் 97900 33307 வாட்ஸ் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.