News May 6, 2024
மதுரை: 15 சிறைவாசிகள் தேர்ச்சி

மதுரை மத்திய சிறையில் +2 தேர்வு எழுதிய 15 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில்
536 மதிப்பெண்கள் பெற்று சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் முதலிடம் பிடித்தார். 532 மற்றும் 506 மதிப்பெண்கள் பெற்று அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அருண்குமார் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற சிறைவாசிகளை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் உடன் உள்ள சிறைவாசிகள் பாராட்டி, வாழ்த்தினர்.
Similar News
News September 13, 2025
மதுரையில் தொழிலதிபர் வெட்டி படுகொலை

மதுரை பார்க் டவுன் 2-ஆவது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் 52. முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்த இவர் நேற்றிரவு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்படுவதாக மனைவிக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு புறப்பட்டார். பார்ட் டவுன் அருகே சென்றபோது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். தொழில் போட்டியா என கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 13, 2025
மதுரையில் முதல் கிரிக்கெட் மைதானம் இங்கு தான்

மதுரை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள், இந்த நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் பிரம்மாண்டமாக கிரிக்கெட் மைதானம் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது விரைவில் திறப்பு விழா காண இருப்பதாக அறிவிப்பு தெரியாதவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News September 12, 2025
மதுரை மாநகர் காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஏதேனும் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக புகார் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், காவல் அதிகாரி தொலைபேசி எண்களுக்கும் புகார் அளிக்கலாம்.