News December 13, 2025
மதுரை: 10th மாணவிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி கோபிநாயக்கன்பட்டியை சேர்ந்த தினகரன் (23), 10ம் வகுப்பு மாணவியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வாலிபர் தினகரனை இன்று கைது செய்தனர்.
Similar News
News December 13, 2025
மதுரை: கலெக்டர் ஆபிசில் SIR தொடர்பான ஆலோசனை கூட்டம்

சிறப்பு தீவிர திருத்த (SIR 2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹ்ரா, (இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுதில்லி) தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் முன்னிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (SIR) பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
News December 13, 2025
மதுரையில் சித்த மருத்துவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை ஆட்சியா் பிரவீன் குமார் வெளியிட்ட செய்தியில், மாவட்ட நலச் சங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயுஷ் குழுமத்தில் காலியாக உள்ள சித்த மருத்துவா் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள், மாவட்ட நிா்வாக செயலா், மாவட்ட சுகாதார அலுவலா், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண் 0452 – 2640778) என்ற முகவரிக்கு வருகிற 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
News December 13, 2025
மதுரையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


