News January 20, 2026
மதுரை: 10 th முடித்தால் மத்திய அரசு வழங்கும் ரூ.15,000 APPLY..

மதுரையில் 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் BE., முடித்தவர்களுக்கான தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நாளை (ஜன.21) காலை 9 மணிக்கு மூன்று மாவடியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு: 9499055748 க்கு அழைக்கலாம்.
Similar News
News January 28, 2026
மதுரை: வீடு / சொத்து / குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News January 28, 2026
மதுரை: கல்லூரியில் சேர ரூ.40,000 உதவித் தொகை!

மதுரை மாவட்ட மக்களே.. உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே<
News January 28, 2026
மதுரை வேளாண் கல்லூரியில் விதைகள் விற்பனைக்கு தயார்

மதுரை வேளாண் கல்லூரி வேளாண் அறிவியல் நிலையத்தில், விதைச்சான்று துறையால் அங்கீகரிக்கப்பட்ட வம்பன் 8.11 ரக உளுந்து விதைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மொத்தம் 33 டன் தரமான வீரியம் கொண்ட விதைகள் கையிருப்பில் உள்ளன. விவசாயிகள் நிலையத்திற்கு நேரில் சென்று ஒரு கிலோ ரூ.110-க்கு வாங்கி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 94420-54780 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


