News December 31, 2025

மதுரை: 10 அடி நீள மலைப் பாம்பு உயிருடன் மீட்பு

image

கொட்டாம்பட்டி அருகே குன்னங்குடிப்பட்டி குடியிருப்பு பகுதியில் விவசாயி கண்ணன் என்பவரது வீட்டின் அருகாமையில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு நேற்று தென்பட்டது. கொட்டாம்பட்டி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் வந்த விஜயராஜ், கெளதம், லோகநாதன், இளையராஜா, கண்ணன் ஆகியோர் விரைந்து சென்று பாம்பை உயிருடன்
பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

Similar News

News January 5, 2026

மதுரை: 25 வயது இளைஞர் மீது போக்சோ

image

மதுரை நெல்பேட்டையை சேர்ந்­த­வர் சீனி­ச­கு­பர் மகன் சேக்­மு­ஜாகிதீன்(25). இவர் கல்­லூரி மாணவி ஒரு­வரை அடிக்­கடி பின்­ தொ­டர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்­ளார். அந்த மாணவி வீட்டிற்கு அதிகாலை சென்று கதவைத்­ தட்டி மிரட்டி பாலி­யல் தொல்லை கொடுத்­துள்­ளார். இது குறித்து விளக்­குத்தூண் போலீ­சார் வழக்கு பதிவு செய்து வாலி­பர் சேக்­முஜாகி­தீனை போக்சோ சட்­டத்­தில் இன்று கைது செய்தனர்.

News January 5, 2026

மதுரை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

image

மதுரை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜன.5) கடைசி நாள். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News January 5, 2026

மதுரை: மன அழுத்தத்தில் ஆசிட் குடித்து தற்கொலை.!

image

மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளாக லேசான மன அழுத்தத்தில் இருந்தவர் அதற்கு சிகிச்சை பெற்றும் தூக்க மாத்திரை போட்டு வந்தார். சில நாட்களாக தூக்கம் வரவில்லை என இரவு முழுவதும் நடந்தபடி இருந்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் நேற்று பாத்ரூம் கழுவும் ஆசிட் குடித்து உயிரிழந்தார். இது குறித்து S.S காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!