News February 9, 2026
மதுரை: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ் 22, செல்வம் மகன் பிரவீன் 23 இருவரும் முன்விரோதம் காரணமாக சங்கம் கோட்டையைச் சேர்ந்த முத்தையா என்பவர் வீட்டில் நேற்று பிப்ரவரி 8 அதிகாலை 3 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ், பிரவீனை கைது செய்து குடும்பப் பகையா, மது போதையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News February 10, 2026
மதுரை: 8 வயது சிறுமிக்கு 81 வயது முதியவர் பாலியல் தொல்லை

மதுரை மாவட்டம், பாலமேடு இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த சில்லி என்ற சின்னச்சாமி(81) இவர் கிராம பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 8 வயது சிறுமியை மறைவான பகுதி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து புகாரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, எஸ்ஐ மொகராஜ் ஆகியோர் சின்னச்சாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
News February 10, 2026
மதுரை: Whatsapp மூலம் கரண்ட் கட்-க்கு தீர்வு!

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்னையா? EB ஆபீஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பwண்ணி உதவுங்க.


