News December 26, 2025
மதுரை: வயல்வெளியில் மயங்கி கிடந்த முதியவர் பலி

மேலூர் அருகே தெற்கு தெரு வயல்வெளி பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தெற்குதெரு விஏஓ மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று இறந்தார். இறந்த நபர் யார் என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
மதுரை: NO EXAM – போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <
News February 2, 2026
மதுரை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
மதுரை: டூவீலர்கள் மோதியதில் இளைஞர் பலி

உசிலம்பட்டி அருகே கல்லூத்தை சேர்ந்தவர் சிவபாண்டி(24). இவர் கரடிகல்லில் இருந்து கூத்தியார்குண்டு சாலையில் நேற்று டூவீலரில் சென்ற போது, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த சேடப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்(40) மோதினார். இதில் தலையில் அடிபட்டு சிவப்பாண்டி பலியானார். படுகாயத்துடன் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


