News October 31, 2025
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் திடீரென பற்றிய தீ

மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் எஸ்கலேட்டர் அறையில், நேற்று காலை 7:20 மணிக்கு திடீரென புகை வந்தது. இதனை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) வீரர் மீனாட்சிசுந்தரம் அறைக்குள் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பான் கொண்டு அணைத்தார்.தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வந்து சேதமடைந்த மின் கேபிள்களை அகற்றினர். இன்ஸ்பெக்டர் அஜித்குமார் என விசாரிக்கிறார்.
Similar News
News October 31, 2025
மதுரையிலே வங்கி வேலை வேண்டுமா..12th போதும்

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு<
News October 31, 2025
மதுரையில் நாளை கிராம சபை கூட்டம்

மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டம் முழுவதும் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நாளை (நவ.1) நடைபெறும். இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 100 நாள் வேலை திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
மதுரை: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


