News December 13, 2025
மதுரை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு இடையே சமயநல்லூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு நேற்று இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
மதுரை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
மதுரை: மதுவால் இளைஞர் தற்கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊமெச்சிக்குளம் காந்தி கிரவுண்ட் தெருவில் வசித்து வந்தவர் அருண்பாண்டி (25). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அருண்பாண்டி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 17, 2025
மதுரை: போலீஸ் கடும் எச்சரிக்கை

ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 3 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும், சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


