News August 10, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 10, 2025
காவலர் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் காவலர் மருத்துவமனைக்கு வேண்டிய மருத்துவ உபகரணங்களான தெர்மா மீட்டர், stretcher, எடை இயந்திரம், உயரம் அளவிடும் கருவி மற்றும் சக்கர நாற்காலி போன்றவற்றை இன்று (ஆக.09) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் காவலர்களின் நலன் கருதி காவலர் மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கினார்.
News August 9, 2025
மதுரை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் பலி

திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கினார். பின்னர் திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News August 9, 2025
மதுரை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு

திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டபின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கியவரை திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.