News February 24, 2026
மதுரை மாநகர காவல் இரவு நேர ரோந்து அதிகாரிகள்

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் அசோகன் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் செல்வின் வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
மதுரை: குறுக்கே வந்த நாய்; பறிபோன உயிர்

குலமங்கலத்தை சேர்ந்த சேக்அமீர்(49) இன்று கோசாகுளம் செல்லும் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வர அதன் மீது மோதினார். படுகாயத்துடன் வீட்டிற்கு சென்ற அவருக்கு கிராம மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் மயக்கம் அடைய, மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை.
News March 5, 2026
மதுரை: இளைஞர் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

சக்கிமங்கலம் அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த மன அழுத்தத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை கோடாங்கி அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் விசாரணை.
News March 5, 2026
மதுரை மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.


