News December 21, 2025

மதுரை மாநகரில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

மதுரை மாநகரில் (21.12.2025) இன்றைய இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மதுரை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். உங்கள் பகுதியில் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் நடந்தால் காவல் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். காவல்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டனர்.

Similar News

News December 27, 2025

மதுரை: பாலிடெக்னிக் மாணவர் குளத்தில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கோபால் பிரியன் 20. இவர் மதுரை மாவட்டம் எழுமலை பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் 3:30 மணிக்கு நண்பர்களுடன் மாவூற்று உதயகிரிநாதர் கோயில் குளத்தில் குளிக்கும் போது தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

மதுரை: ரேஷன் கார்ட் இருக்கா… முக்கிய அறிவிப்பு… டிச.31 கடைசி

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

News December 27, 2025

மதுரை அருகே 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மருது பாண்டி 19. இவர் நேற்று மாலை வெளியில் சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்த பொழுது அவரது தந்தை தாயாருடன் தகராறு செய்வதை பார்த்து கண்டித்துள்ளார். இது தொடர்பாக தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மனம் உடைந்த மருதுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!