News May 23, 2024

மதுரை மாநகராட்சி அதிரடி முடிவு!

image

மதுரை மாநகராட்சியில் தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் வரிவசூல் வேகத்தை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் மாதம் தொடக்கம் முதல் வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரி பாக்கி உள்ளவர்கள் முறையாக செலுத்த ஆணையாளர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News July 9, 2025

அரசு விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு

image

எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் 15 பேர் இன்று காலை விடுதியில் வழங்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி உணவை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 9, 2025

மதுரை: மண்டல தலைவர்களின் ராஜினமா ஏற்பு

image

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் ஜூலை.7 அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிசெல்வி, சுவிதா, வாசுகி, மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவர்களின் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக்கொண்டார்.

News July 9, 2025

தமிழகத்திலேயே அதிக வெயில் மதுரையில்

image

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் தினந்தோறும் வெயிலின் அளவு 100ஐ கடந்து சதமடித்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி வரை நேற்று வெயில் கொளுத்தியது.
மதுரை மாநகர் பகுதியில் 102 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது.

error: Content is protected !!