News September 15, 2025
மதுரை மாநகராட்சியில் அடுத்த ‘பூதம்’ மேலும் ஒரு முறைகேடா?

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புயல் அடங்குவதற்குள் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புக்காக பள்ளங்கள் தோண்டி குழாய்ப் பதிக்கும் பணிகளில் மீட்டர் அளவை குறைத்து காண்பித்து மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய வகையில், ரூ.பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்தும் வரதராஜ் நிர்வாகம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 15, 2025
கப்பலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

மதுரை கருவேலம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன் (35). நேற்று மாலையில் இவர் பைக்கில் கருவேலம்பட்டி-கப்பலூர் ரிங்ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் பைக்கில் மோதியது. அதில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 15, 2025
மதுரை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

மதுரை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<
News September 15, 2025
மதுரையில் உணவு தங்குமிடத்துடன் 45 நாள் பயிற்சி

மதுரை மஹபூப்பாளையம் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் வேளாண் சார்ந்த தொழில் துவங்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. வங்கிக்கடன் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. 45 நாள் பயிற்சி தங்குமிடம், உணவு இலவசம். விரும்புவோர் இன்று (செப்.,15) சிப்போ அலுவலகத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 78715 55825ல் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க தொழில் துவங்க நல்ல வாய்ப்பு