News December 28, 2025

மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை.!

image

மேலூர் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் நாகப்பிரகாஷ்(54). மது போதைக்கு அடிமையான இவரை மனைவி சுப்புலட்சுமி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நாக பிரகாஷ் நேற்று (டிச.27) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய மேலூர் போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 30, 2025

மதுரை மக்களே., நாளையே கடைசி! CHECK பண்ணுங்க

image

மதுரை மக்களே பான் கார்டுடன் ஆதாரை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்வது கூட கடினமாகி விடும். எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை <>இங்கே கிளிக்<<>> செய்து சரிபார்த்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 30, 2025

மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 30, 2025

வாடிப்பட்டி அருகே ஜோதிடர் தூக்கிட்டு தற்கொலை

image

வாடிப்பட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் மகன் ஜோதி முருகன்(26). திருமணமாகாத இவர் ஜோதிடராக இருந்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவருக்கு தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டும் பலனில்லை. இதில் மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தாய் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!