News September 8, 2025
மதுரை: மதுபான பாரில் 3 பேருக்கு கத்திக்குத்து

குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரில் குடிபோதையில் இருந்த இரு தரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் மது பாட்டில், கத்தியால் குத்தியதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசை கண்டதும் பாரில் இருந்தவர்கள் வைகை ஆற்றுக்குள் குதித்து தப்பினர். அவர்களை போலீசார் விரட்டி 10 பேரை பிடித்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி.
Similar News
News September 8, 2025
BREAKING: ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மரணம்

மதுரை, அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாய் மீனா, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
News September 8, 2025
பழமுதிர்சோலையில் தவில், நாதஸ்வரம் பயிற்சி

அழகர் கோவிலில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மூன்றாண்டுகள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி , வயது 13 முதல் 20 வயதிற்குள் உள்ள இந்து மதத்தினை சேர்ந்த ஆண் பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். *ஷேர்
News September 8, 2025
மதுரையில் பிரபல ரவுடி உயிரிழப்பு

மதுரை, சுந்தராபுரம் மார்க்கெட் பகுதி தண்ணீர் தொட்டி அருகே ஒருவர் நேற்று இறந்து கிடந்துள்ளார். போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி கலைவாணன் கொலை வழக்கில் தொடர்புடைய அவனியாபுரம் பராசக்தி நகர் கிருஷ்ணமூர்த்தி என தெரிந்தது, அப்பகுதியில் பிரபல ரவுடியான இவரது மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.