News August 16, 2024
மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே 31.12.2024 க்குள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News October 25, 2025
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (21.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News October 24, 2025
மதுரை: ஒரே ஒரு பயணி; விமானம் ரத்து

மதுரை விமான நிலையத்திற்கு தினசரி துபாயிலிருந்து காலை 6.40மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு, சரியாக 10.20 மணிக்கு மதுரை வந்தடையும். மீண்டும் விமான நிலையத்தில் இருந்து 11.30 மணி அளவில் புறப்பட்டு 2.30 மணி அளவில் துபாய் சென்றடையும். இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து காலை 11.30 மணியளவில் துபாய் செல்ல வேண்டிய விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
News October 24, 2025
மதுரையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


