News September 27, 2025
மதுரை: போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்-தண்டனை விதிப்பு

மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், SI உள்ளிட்ட 4 போலீசாருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.மதுரையில் ஒரு திருட்டு வழக்கில் ss காலணி போலீசார் 17 வயது சிறுவனை சட்டவிரோதமாக காவலில் வைத்து துன்புறுத்தியதில் அவர் 2019 ஜன.,24ல் இறந்தார். அவரது தாய் கோச்சடை ஜெயா 2019 ல் போட்ட வழக்கிற்கு தற்போது இந்த தீர்ப்பு வந்துள்ளது
Similar News
News January 29, 2026
திருமங்கலம் அருகே 2 மாத குழந்தை மரணம்

திருமங்கலம் அருகே அழகுசிறையில் கருணை இல்லம் செயல்படுகிறது. கடந்த 12-ம் தேதி குழந்தைகள் நல குழு மூலமாக காப்பகத்தில் 2 மாத பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பாரதி என பெயர் சூட்டப்பட்டது. இந்த குழந்தை பிறந்த போது அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காப்பகத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது.
News January 29, 2026
திருமங்கலம் அருகே 2 மாத குழந்தை மரணம்

திருமங்கலம் அருகே அழகுசிறையில் கருணை இல்லம் செயல்படுகிறது. கடந்த 12-ம் தேதி குழந்தைகள் நல குழு மூலமாக காப்பகத்தில் 2 மாத பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பாரதி என பெயர் சூட்டப்பட்டது. இந்த குழந்தை பிறந்த போது அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காப்பகத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது.
News January 29, 2026
மதுரை: நகை கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி

பரவை பேங்க் காலனியைச் சேர்ந்த சரவணன் நகை கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறந்த போது கண்காணிப்பு கேமரா ஒயர்கள் துண்டிக்கப்பட்டு, பின்புற சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்ம ஆசாமிகள் கடையின் பின்பக்கம் இருந்து சுவரை துளையிட்ட போது கடையில் இருந்த அலாரம் ஒலி எழுப்பியதால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


