News December 31, 2025
மதுரை: போலீஸ் ஐ.ஜி டிரான்ஸ்பர்.. புதிய ஐ.ஜி நியமனம்

மதுரை, புதிய தென் மண்டல ஐஜியாக விஜேந்திர பிதாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா, பதவி உயர்வு பெற்று ஆவடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பதிலாக சென்னையில் கூடுதல் கமிஷனராக இருக்கும் விஜேந்திர பிதாரி புதிய தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 28, 2026
மதுரையில் இறைச்சி விற்பனைக்கு தடை

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதியில் வடலூர் வள்ளலார் தினத்தை முன்னிட்டு பிப்.1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. விற்பனை கடைகளை திறக்கவும் கூடாது, மீறி விற்பனை செய்தால் இறைச்சிகளை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News January 28, 2026
மதுரை : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
மதுரை: பெட்ரோல் குண்டு வீசிய போலீசார் மீது வழக்கு

கள்ளிக்குடியை சேர்ந்த மாணிக்கத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் சொத்து பிரச்சினை காரணமாக, அரிவாள், கத்தியுடன் வீடு புகுந்து மாணிக்கத்தை நேற்று முன்தினம் தாக்கி, பெட்ரோல் குண்டை வீசினர். சென்னை ஆயுதப்படை போலீஸ் மருதுபாண்டி(29), பெரியசாமி(55), சின்ன மாரிச்சாமி(50), சூர்யா(32) உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.


