News October 27, 2024

மதுரை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் – மாணவர் கைது

image

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவன் அபிஷேக்கை கைது செய்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 4, 2026

மதுரையில் கைதி தப்பி ஓட்டம் – அதிர்ச்சி

image

கோயமுத்தூர் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்து வந்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே வந்த போது அதில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இயர்மான்(29) என்பவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து இயர்மான் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News February 4, 2026

மதுரை: ரூ.29,380 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

image

இந்தியா முழுவதும் இந்திய தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது டாக் சேவக் பிரிவில் 2019 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.12,000 – ரூ.29,380 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT

News February 4, 2026

மதுரை: மாடு முட்டியதில் வாலிபர் பலி

image

சிவகங்கை அருகே மேலசாளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவர் தைப்பூச திருவிழாவையொட்டி மேலூர் அருகே செம்மனிப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு காண தனது நண்பருடன் வந்தார். அப்போது மாடு முட்டியதில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!