News October 26, 2025
மதுரை: போட்டி தேர்வில் தோல்வி இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை முடக்கத்தானை சேர்ந்தவர் செல்வம், இவரது 3வது மகன் சந்துரு பி.இ., பட்டதாரியான இவர், குரூப் 4 தேர்வுக்கு படித்து வந்தார். இரு மாதங்களுக்கு முன் நடந்த குரூப் 4 தேர்வில் பங்கேற்றார். தேர்ச்சி பெற்றுவிடுவோம் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். அக்.22ல் தேர்வு முடிவு வெளியானது. இதில் சந்துரு குறைவான மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெறவில்லை. இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News February 5, 2026
மதுரையில் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில் போலீ டீ தூள், மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 697 கிலோ டீ தூள், 100 கிலோ மசாலா தூள் போலி லேபில் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜன.31 அன்று விருதுநகரில் 13.5 டன் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News February 5, 2026
மதுரையில் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில் போலீ டீ தூள், மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 697 கிலோ டீ தூள், 100 கிலோ மசாலா தூள் போலி லேபில் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜன.31 அன்று விருதுநகரில் 13.5 டன் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News February 5, 2026
செல்லூர் கண்மாய்.. அதிமுக, திமுக போட்டிபோட்டு ஆய்வு

மதுரை, செல்லூர் கண்மாயை அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஜனவரி 28 அன்று ஆய்வு செய்து தூர்வார வலியுறுத்தினார். இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி புதன்கிழமை மாலை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுகவினர் போட்டிப்போட்டு ஆய்வு செய்வது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.


