News February 13, 2026

மதுரை: பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்

image

உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி செல்வராணி (40). ரவிக்குமார் ராஜஸ்தானில் தோசை கடை வைத்துள்ளார். செல்வராணி தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 18, 2026

மதுரையில் நிலம் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சுகோங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <>கிளிக் <<>>செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News February 18, 2026

மதுரை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

News February 18, 2026

மதுரை: திருமணம் நிச்சயமான தம்பதிக்கு நடந்த துயரம்

image

தி.குன்றம் அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசி பிரஜின் (20) மற்றும் தோப்பூரைச் சேர்ந்த சசிகலாதேவி (18) காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், மோட்டார்சைக்கிளில் சென்றபோது தோப்பூர் மேம்பாலம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசிகலாதேவி உயிரிழந்தார். பிரஜின் மதுரை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!