News January 1, 2026

மதுரை: பிள்ளைகள் கைவிட்டதால்… மூதாட்டி சோக முடிவு!

image

பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(93). கணவருடன் தனித்து வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரும் இறந்து போனார். இவரது குழந்தைகளில் சிலர் இறந்து போன நிலையில், இருக்கும் மற்ற குழந்தைகள் இவரை கவனிக்கவில்லை. இதனால் எருக்க இலையை அரைத்து குடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் இறந்து போனார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 1, 2026

மதுரை: உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் போது நேர்ந்த சோகம்.!

image

தேனி பெரியகுளத்தை சேர்ந்­த­வர் போத்­தம்­மாள்(60). கப்­ப­லூரில் உள்ள உறவினரை பார்ப்­ப­தற்­காக வந்­தவர், பின் ஊருக்­கு செல்­வ­தற்­காக உறவி­னரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். திருமங்­க­லம் மறவன்குளம் அருகே பின்னால் வந்த டூவீலர் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்­து தலை­யில் பலத்த காயம் ஏற்­பட்டு சம்­பவ இடத்தி­லேயே அவர் உயிரிழந்­தார். திருமங்­க­லம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News January 1, 2026

மதுரை : ஆட்டோ டிரைவர் வெட்டி கொடூர கொலை

image

மதுரை அருகே விருசமரத்து ஊரணி பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முனீஸ்(26) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்றிரவு மதுரை விமான நிலைய சாலையில் தனது சகோதரியுடன் பேசி கொண்டிருந்த போது பெருங்குடியை சேர்ந்த 4 பேர் முனீஸிடம் வாக்குவாதம் செய்து கத்தி, அரிவாள் கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முன்பகை காரணமாக கொலை நடந்ததா என அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 1, 2026

மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!