News April 13, 2024

மதுரை: பிளஸ் 2 மாணவன் தற்கொலை

image

மதுரை அருகே நிலையூரை சேர்ந்தவர் செந்தில் மகன் ராகுல்(18). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இவரது தந்தை இறந்து விட்டதால், தாய் ராகுலை வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மனம் வெறுத்த ராகுல் அப்பகுதியில் உள்ள சூரக்குளம் கண்மாய் பகுதியில் விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 6, 2025

மதுரையில் நாளை மின்தடை

image

மதுரையில் நாளை (நவ7) இந்தியன் ஆயில் நிறுவனம், காஸ் கம்பெனி, கப்பலூர் ஹவுசிங் போர்டு, வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், பிஆர்சி காலனி, நிலையூர், ஆர்வி பட்டி, கைத்தறி நகர், எஸ்ஆர்வி நகர், இந்திரா நகர், கப்பலூர், சிட்கோ, மெப்கோ கம்பெனி, தியாகராஜர் மில், கருவேலம்பட்டி, சம்பகுளம், பரம்புபட்டி, மில் காலனி, எஸ்.புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துப்பட்டி பகுதிகளில் மின்தடை.

News November 6, 2025

மதுரை: +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை, சொக்­க­நா­த­பு­ரம் பகுதியை சேர்ந்­த மாணவி(16). மாந­க­ராட்சி பள்­ளி­யில் பிளஸ் 1 படித்து வந்­தார். 3 மாதத்திற்கு முன்பு இவ­ருக்கு கை வலி ஏற்­பட, அவரால் எழுத முடி­ய­வில்லை. நோய்க்கு சிகிச்சை பெற்றும் வலி குறையாததால் மன­மு­டைந்­து வீட்­டில் இன்று தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். தல்­லா­கு­ளம் போலீ­சார் விசா­ரிக்கின்றனர்.

News November 6, 2025

மதுரை: மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு

image

பேரையூர் அருகே உள்ள மேலக்காடனேரி இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜா 64 இவர் கடந்த மாதம் 3ம் தேதி தெருவில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற பசு மாடு திடீரென அவரை இடித்து கீழே தள்ளியது. சாலையில் விழுந்து பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜா உயிரிழந்தார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!