News March 2, 2026

மதுரை: பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு.!

image

சோழவந்தான் அருகே கீழ நாச்சிகுளத்தை சேர்ந்தவர் நபிஷா (70). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பாக அமர்ந்து பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார். வீட்டு அருகில் அடர்த்தியாக புதர் மண்டியிருந்த பகுதியிலிருந்து வெளிவந்த பாம்பு மூதாட்டியை தீண்டியது. மயங்கி விழுந்த மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

Similar News

News March 2, 2026

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

News March 2, 2026

மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

image

பிரதமர் மோடி நேற்று மதுரை வந்து சென்ற நிலையில், மதுரை தனியார் நட்சத்திர விடுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

News March 2, 2026

மதுரை: கார் – வேன் மோதல்; ஒருவர் பரிதாப பலி.!

image

மதுரை சிக்கந்தர் சாவடி பொற்கொடி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சவாரி சென்று விட்டு திரும்பி வருகையில், வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இவர் கார் மீது எதிரே வந்த பால் வேன் நேருக்கு நேராக மோதியது. இதில் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!