News December 25, 2025
மதுரை: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

வாடிப்பட்டி அருகே எம்.புதுப்பட்டி சேர்ந்தவர் கண்ணன் மனைவி பஞ்சு (55). இவர் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் நெல் அறுவடை பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது நெற்கதிரில் பதுங்கி இருந்த பாம்பு ஒன்று இவரை கடித்தது. சோழவந்தான் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை மருத்துவமனை கொண்டு வரப்பட்ட இவர், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 2, 2026
JUST IN திருப்பரங்குன்றம்: ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவு…

திருப்பரங்குன்றம் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த, மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி. திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் முதல் உச்சி வரை கால்நடைகளை பலியிடவும், அசைவம் கொண்டு செல்லவும் கூடாது. கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.20 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
News January 2, 2026
மதுரை: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

மதுரை மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT..!
News January 2, 2026
மதுரை: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <


