News March 3, 2026

மதுரை: பள்ளி மாணவி தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அழுத்தம் கொடுத்ததனால் விரக்தி அடைந்த மாணவி சரிதா நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மாணவர்கள் தற்கொலை குறித்த எண்ணம் வந்தால் 104ஐ அழைக்கவும்; தற்கொலை தீர்வல்ல.!)

Similar News

News March 11, 2026

மதுரை: பெண்களை நிர்வாணமாக சித்தரித்தவர் கைது

image

மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் சரவணன்(39) பங்கு தாரர்களாக கப்பலூர் சிட்கோவில் கார்க் (தக்கை) செய்யும் கம்பெனி வைத்துள்ளனர். அங்கு பணியாற்றும் பெண்களை செல்போனில் படம் எடுத்து, அதை AI உதவியுடன் நிர்வாணமாக மாற்றி சரவணன் ரசித்து வந்துள்ளார். இதை பங்குதாரர் சுப்புராஜ் கண்டுபிடித்து திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சரவணனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

News March 10, 2026

மதுரை: கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது – MP

image

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

BREAKING மதுரை: சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஒப்புதல்

image

மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஏற்கெனவே மக்களவையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.

error: Content is protected !!