News March 28, 2024

மதுரை: பட்டப்பகலில் ரைஸ் மில் அதிபர் கொடூர கொலை

image

மதுரை சிந்தாமணி சாலை ராஜம்மா நகரில் விஜயலட்சுமி அரிசி ஆலையை சௌந்தர குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இன்று அரிசி ஆலையில் இருந்த போது மர்ம கும்பல் சௌந்தர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆலைக்கு அருகே கருவேலமரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 14, 2025

மதுரையில் அரசு சான்றிதழுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

image

மதுரை புதுார் தொழிற்பேட்டையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஆக. 16, 17ல் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயிற்சி, ஆக. 23, 24ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜி.எஸ்.டி., பிராக்டிஷனர் பயிற்சிகள் நடக்கிறது. 10ம் வகுப்பு படித்த, 18 வயது நிரம்பிய இருபாலர்கள் சேரலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அறிய 8695646417 அழைக்கலாம். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க .

News August 13, 2025

மதுரை: தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் ஆர்வலருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், www.tamilvalarchithurai.tn.gov.in ஆகியவற்றில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

News August 13, 2025

மதுரை: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து ஆக.30க்குள் விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!