News November 13, 2025

மதுரை: நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு.!

image

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் சிட்டப்பட்டியை சேர்ந்த 3 பேர், பூவந்தி – சக்குடி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சோனேஸ்வரி என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 13, 2025

மதுரை: இலவச தையல் இயந்திரம் பெறலாம்

image

மதுரை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள்கள் பலரும் ஒன்றிய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ளனர். அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தையல் இயந்திரம் பெற விரும்புவோர், நவ. 20ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

மதுரை: சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி.!

image

மதுரை முல்லை நகரை சேர்ந்தவர் இளஞ்சியம் (75). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது இவர் சேலையில் தீ பற்றியது. உயிருக்கு ஆபத்தான நிலையில்
அவரை மதுரை அரசு மருத்துவமனயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை
பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 12, 2025

மதுரையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!