News December 22, 2025

மதுரை: திருமணத்திற்கு மறுத்த மகளுக்கு கத்தி குத்து

image

விருதுநகரை சேர்ந்­த­ ரமேஷ் ம­கள் பிரியங்கா(24). நர்சிங் முடித்த இவருக்கு திருமண ஏற்­பா­டுகளை செய்ய, தனக்கு திருமணத்தில் விருப்­பமில்லை ஒருவரை காதலிப்­பதாக கூறினார். பிரியங்­காவை அவனியாபு­ரத்தில் உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்து தந்தை ரமே­ஷ், அண்ணன் பால­முருகன் சேர்ந்து அவரை தாக்கி கத்தியால் குத்தினர். அவனியா­புரம் போலீசார் ரமேஷை(51) இன்று கைது செய்­தனர். பால­முரு­கனை தேடி வருகின்­ற­னர்.

Similar News

News December 25, 2025

மதுரை: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

image

வாடிப்பட்டி அருகே எம்.புதுப்பட்டி சேர்ந்தவர் கண்ணன் மனைவி பஞ்சு (55). இவர் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் நெல் அறுவடை பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது நெற்கதிரில் பதுங்கி இருந்த பாம்பு ஒன்று இவரை கடித்தது. சோழவந்தான் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை மருத்துவமனை கொண்டு வரப்பட்ட இவர், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 25, 2025

மதுரையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க.

News December 25, 2025

மதுரை: தீரா நோயால் மனமுடைந்து ஒருவர் தற்கொலை.!

image

ஒத்தக்கடை வசந்த நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (53). இவர்
மாட்டுத்தாவணி அருகே உள்ள மருத்துவமனையில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து
நேற்று (டிச.24) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!