News November 16, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் தனது மனைவி செல்வியுடன் 41 கடந்த 11ஆம் தேதி விருதுநகர் திண்டுக்கல் சர்வீஸ் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது செல்வி தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (நவ 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் புகாரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 16, 2025
மதுரை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News November 16, 2025
மதுரை: எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

மதுரை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News November 16, 2025
மதுரையில் வாலிபருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு

மதுரை பேரையூர் அருகே மங்கள்ரேவு தெற்கு தெருவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று மயானத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது உறவினர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது, துக்க வீட்டைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து அதை ஊரைச் சேர்ந்த தங்கமுத்து 35 என்பவரை அரிவானால் வெட்டினர், கையில் வெட்டு காயம்பட்ட அவர் பேரையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


