News November 13, 2025

மதுரை: சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி.!

image

மதுரை முல்லை நகரை சேர்ந்தவர் இளஞ்சியம் (75). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது இவர் சேலையில் தீ பற்றியது. உயிருக்கு ஆபத்தான நிலையில்
அவரை மதுரை அரசு மருத்துவமனயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை
பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 13, 2025

மதுரை: சிலிண்டர் ஏற்றி வந்த வேன் மோதி வாலிபர் பலி.!

image

ஆட்டுக்குளம் ஊராட்சி உலகநாதபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் வல்லரசு(26). இவர் நேற்றிரவு மேலூர் சிவகங்கை சாலையில் டூவீலரில் சென்ற போது பெருமாள்பட்டி அருகே எதிரே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வேன் மீது மோதினார். இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ் விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 13, 2025

மதுரை: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

image

மதுரை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிகேற்ப சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 13, 2025

மதுரை: இலவச தையல் இயந்திரம் பெறலாம்

image

மதுரை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள்கள் பலரும் ஒன்றிய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ளனர். அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தையல் இயந்திரம் பெற விரும்புவோர், நவ. 20ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!