News January 4, 2026
மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 6, 2026
மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் எண்கள்

மதுரை மாவட்டத்தில் இன்று (06.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.
News February 6, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (06.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News February 6, 2026
மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மேலவளவு வடக்கு காலனியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(44). மது போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மனைவி ஜெயபாரதி(35)யுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சத்தியமூர்த்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


