News November 28, 2025
மதுரை: சகோதரியின் வீட்டை அடித்து நொறுக்கிய முதியவர்கள்

மதுரை அருகே காஞ்சரம் பேட்டையை சேர்ந்த பஞ்சவர்ணம்(56), அவரது வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு வீடு கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் முத்துமாயி(70), பழனியம்மாள்(60) ஆகியோர் சேர்ந்து அந்த இடம் தனக்கு தந்தை கொடுத்ததாக கூறி பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.
Similar News
News November 28, 2025
மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

மதுரை அருகே தென்னூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (50 ). இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்டிடப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்றபடி கம்பி கட்டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

மதுரை அருகே தென்னூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (50 ). இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்டிடப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்றபடி கம்பி கட்டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
துரித உணவு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்

மதுரை திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீயணைப்பு நிலையம் அருகே ரூட்செட் பயிற்சி நிலையத்தில் டிச. 8 முதல் 10 நாட்களுக்கு துரித உணவு தயாரித்தல், இயற்கை உணவு, சிறுதானிய உணவு தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை நடக்கும் முகாமில் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். டிச. 7க்குள் 94436 00561 ல் முன்பதிவு செய்யலாம்.


