News November 24, 2025

மதுரை: குறுக்கே வந்த நாயால் பறிபோன உயிர்

image

சோழவந்தான் கண்ணன் மகன் வீரமணிகண்டன் 25. தனியார் பைனான்ஸ் ஊழியர். பள்ளபட்டி- திருமங்கலம் ரோட்டில் டூவீலரில் சோழவந்தானுக்குச் சென்றபோது அரசு விதைப்பண்ணை அருகே நாய் ஒன்று குறுக்கே வந்தது. உடனடியாக பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார். விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

மதுரை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

மதுரை: வியாபாரிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு

image

மதுரை மாவட்டம் தபால்தந்தி நகர் பாமா நகர் பகுதியில் காய்கறி சந்தை இயங்கி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி அந்த காய்கறி சந்தைக்கு அனுமதி மறுத்தது. இதனால் நேற்று வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளின் சமரசத்தை வியாபாரிகள் ஏற்காத நிலையில் போலீசார் கைது செய்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News November 24, 2025

JUST IN மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார் என மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!