News January 6, 2025

மதுரை: காவல் துணை ஆணையர் பொறுப்பு ஏற்பு

image

மதுரை மாநகரத்தின் காவல் துணை ஆணையராக (வடக்கு) இதுவரை பணியாற்றிய மதுகுமாரி, மதுரை 6வது பட்டாலியன் எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு புதிதாக G.S. அனிதா IPS, இன்று (06.01.2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் நெல்லை தலைமையகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 14, 2026

மதுரை: கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்.!

image

சக்குடியை சேர்ந்த மலைச்சாமி(56), மனைவி காளியம்மாளுடன்(51) டூவீலரில் திருவாதவூர் ரோட்டில் நேற்று வந்து கொண்டிருந்தார். பதினெட்டாங்குடி அருகே பெட்ரோல் தீர்ந்து போக, டூவீலரை உருட்டியபடி அவர்கள் நடந்தனர். அங்கு மேய்ந்து கொண்டு இருந்த மாடு ஒன்று காளியம்மாளை முட்டியது. மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு பலியானார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 14, 2026

மதுரை: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை 4 வகைகள் உள்ளது.

AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்

PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்

NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்

NPHH: சில பொருட்கள் மட்டும்

உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 14, 2026

மதுரை: ரவுடி தற்கொலை – அதிர்ச்சியூட்டும் காரணம்..!

image

மதுரை, சமயநல்லூர் அருகே அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ரவுடி பிசிறு என்ற பிரபு(31) நேற்று முன்தினம்(பிப்.12) அவரது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு மீது கொலை, கூட்டு பாலியல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமயநல்லூர் போலீசார் விசாரணையில் இரவு மது அருந்த பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மனைவி பணம் தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ளார்.

error: Content is protected !!