News January 6, 2025
மதுரை: காவல் துணை ஆணையர் பொறுப்பு ஏற்பு

மதுரை மாநகரத்தின் காவல் துணை ஆணையராக (வடக்கு) இதுவரை பணியாற்றிய மதுகுமாரி, மதுரை 6வது பட்டாலியன் எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு புதிதாக G.S. அனிதா IPS, இன்று (06.01.2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் நெல்லை தலைமையகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 20, 2025
BREAKING:மதுரை தவெக மாநாடு -பேனர் வைப்பதில் ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டிற்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 19 வயது மாணவன் உயிரிழந்தார். நாளை தமிழக வெற்றி கழத்தின் 2 வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெறவுள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
News August 20, 2025
மதுரையில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் விரைவில் நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கு இலவச பயிற்சிகள் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வு செப். 28ல் நடக்கிறது. இத்தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கோ.புதூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடந்து வருகிறது, இந்த வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News August 20, 2025
மதுரையில் 2000 பேருக்கு வேலை உறுதி.!

மதுரையில் வரும் சனிக்கிழமை 23.8.25 அன்று மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊராக வளர்ச்சி துறை சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 80 நிறுவனங்களிலிருந்து 2000க்கு மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை நேரில் சென்று பயன்பெறலாம்.இந்த நல்ல வாய்ப்பினை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.