News December 30, 2025
மதுரை: கார் மோதி 2 பேர் துடிதுடித்து பலி

கொட்டாம்பட்டி, சொக்கம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை(47), இவரது சகோதரர் சுரேஷ்(40), பாபு(36) ஆகியோர் ஒரே டூவீலரில், நேற்று இரவு நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வலைச்சேரிபட்டி விலக்கு அருகே டூவீலர் சட்டென்று சாலையை கடக்க, அவர்கள் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அண்ணாதுரை, சுரேஷ் உயிரிழந்தனர். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து பற்றி கொட்டாம்பட்டி போலீஸ் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
மதுரை மக்களே.. இனி பத்திரப்பதிவு சுலபம்

மதுரை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு <
News December 31, 2025
மதுரை: 10 அடி நீள மலைப் பாம்பு உயிருடன் மீட்பு

கொட்டாம்பட்டி அருகே குன்னங்குடிப்பட்டி குடியிருப்பு பகுதியில் விவசாயி கண்ணன் என்பவரது வீட்டின் அருகாமையில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு நேற்று தென்பட்டது. கொட்டாம்பட்டி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் வந்த விஜயராஜ், கெளதம், லோகநாதன், இளையராஜா, கண்ணன் ஆகியோர் விரைந்து சென்று பாம்பை உயிருடன்
பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
News December 31, 2025
மதுரை: ரூ.3 லட்சம் கடன்.. 50% தள்ளுபடி! APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


