News February 8, 2026
மதுரை: கார் மோதியதில் ஒருவர் பலி

கள்ளந்திரி அருகே பொய்கை கரைபட்டியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி கருப்பாயி(64). இவர் நேற்று முந்தினம் மாலை அழகர் கோவில் ரோட்டில் நடந்து சென்ற போது, தாய் ஓட்டல் எதிரே அதி வேகமாக வந்த கார் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார் டிரைவரை கைது செய்தனர்.
Similar News
News February 18, 2026
மதுரை: திருமணம் நிச்சயமான தம்பதிக்கு நடந்த துயரம்

தி.குன்றம் அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசி பிரஜின் (20) மற்றும் தோப்பூரைச் சேர்ந்த சசிகலாதேவி (18) காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், மோட்டார்சைக்கிளில் சென்றபோது தோப்பூர் மேம்பாலம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசிகலாதேவி உயிரிழந்தார். பிரஜின் மதுரை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
News February 18, 2026
மதுரை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் முழுவதும் மூடல்

மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினமே மதுபான கடைகளில் கூட்டம் குவிந்தது.
News February 18, 2026
மதுரையில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

மதுரை, வெள்ளலூர் அருகே கண்மாய் பட்டியை சேர்ந்த அன்புசெல்வம் (19) நேற்று முன்தினம் நண்பர் ரஞ்சித்(17) அழைத்து கொண்டு டூவீலரில் உறங்கான்பட்டி பெரியகுளத்து கண்மாய்கரை பகுதியில் சென்றுள்ளார். அவ்வழியாக வந்த வேன் டூவீலர் மீது மோதியது. இதில் அன்புசெல்வம் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயத்துடன் ரஞ்சித் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கீழவளவு போலீசார் வேன் டிரைவர் ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரணை.


